திருமணமான இளம்பெண்ணுடன் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை


திருமணமான இளம்பெண்ணுடன் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
x

காதலனுடன் செல்போனில் மனைவி பேசுவதை மணிகண்டன் கண்டித்து வந்துள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அரண்மனைபுதூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி (23) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு தேன்மொழிக்கும், கோவையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் கோவை போத்தனூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகும் காதலை கைவிடாத தேன்மொழி, மணிகண்டனுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 17-ந்தேதி தேன்மொழி, தனது கணவரிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் தேன்மொழி, மணிகண்டனை கோவைக்கு வரச்சொல்லி அவருடன் பல்வேறு இடங்களில் சுற்றி வந்ததாக தெரிகிறது.

வாழ்க்கை பந்தத்தில் இணைய முடியாத சோகத்தில் தேன்மொழி, மணிகண்டன் ஆகிய இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு ரெட்டியார்சத்திரத்தை அடுத்த பலக்கனூத்து பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பாலக்காட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story