பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி


பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி
x

பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கணவன்-மகள் கண் எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

காஞ்சிபுரம்

பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). சலூன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பவளக்கொடி (28). இவர்களுடைய மகள் பவித்ரா (5). நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். பூந்தமல்லி மேம்பாலம் அருகே வந்தபோது சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்காமல் இருக்க மோட்டார்சைக்கிளை சதீஷ்குமார் திருப்பினார். அப்போது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர்.அப்போது பின்னால் வந்த லாரி பவளக்கொடி மீது ஏறி இறங்கியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய பவளக்கொடி தனது கணவன் மற்றும் மகள் கண் எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் டேனிபாபு (38) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story