காக்கையாடி ஆறுமுகசுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு

காக்கையாடி ஆறுமுகசுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூர் காக்கையாடியில் ஆறுமுகசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடி கிருத்திகையையொட்டி சாமிக்கு 108 லிட்டர் பால்குட அபிஷேகமும், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேமும் செய்யப்பட்டது. தொடர்ந்து விபூதி, செந்தூரம், சந்தனக்காப்பு ஆகிய அலங்காரங்களில் ஆறுமுகசுப்பிரமணியசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





