ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா நேற்று தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழா நேற்று இரவு கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று அம்மன் மரக்கேடயத்தில் எழுந்தருளி 4-ம் பிரகாரம் வழியாக வீதியுலா வந்தார். விழாவின் 2-ம் நாளான இன்று(வெள்ளிக்கிழமை) அம்மன் கிளி வாகனத்திலும், 3-ம் நாளான நாளை (சனிக்கிழமை) காமதேனு வாகனத்திலும், 4-ம் நாளன்று சந்திரபிரபை வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், 6-ம் நாள் பல்லக்கிலும், 7-ம் நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடும், ரிஷபமூஷிகமயூர வாகனத்திலும், 8-ம் நாள் சிம்ம வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வருகிறார். விழாவின் 9-ம் நாளான 21-ந் தேதி காலை கோரதத்திலும், மாலை வெள்ளிமஞ்சத்திலும், 10-ம் நாள் பல்லக்கிலும் வீதியுலா வருகிறார். அன்று அம்மன் சன்னதியில் ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ம் நாள் வெள்ளிமஞ்சத்தில் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் வருகிற 24-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் இரவு 7 மணிக்குள் கோவில் வளாகத்தில் உள்ள உள்தெப்பகுளத்தில் நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்திலும், பஞ்சமூர்த்திகளுடனும் தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story