குதிரை பந்தய வீரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது


குதிரை பந்தய வீரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
x

குதிரை பந்தய வீரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 23). இவர் குதிரை வண்டி பந்தய வீரர் ஆவார். இவரை முன்விரோதம் காரணமாக கடந்த மே மாதம் 26-ந் தேதி 7 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மிளகுப்பாறை செல்வநகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (30), தாராநல்லூர் அலங்கநாதபுரத்தை சேர்ந்த ஹரிபிரசாத் உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இந்த கொலை வழக்கில் பல நாட்களாக தலைமறைவாக இருந்த மின்னப்பன்நகரை சேர்ந்த தினேஷ்பாபுவை (28) தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.


Next Story