போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்த உறுதிமொழி ஏற்பு


போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்த உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 22 May 2023 6:45 PM GMT (Updated: 22 May 2023 6:45 PM GMT)

விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விஷச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுப்பது குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில் போலீசார் அனைவரும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் கிராமப்புறங்களில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும். மேலும் யாரேனும் போதைப்பொருட்கள் விற்றால் அது குறித்த தகவலை தெரிவிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என போலீசாருக்கு இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் உத்தரவிட்டார்.


Next Story