வாகனம் மோதி முதியவர் சாவு


வாகனம் மோதி முதியவர் சாவு
x

வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தார்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை அருகே உள்ள குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 61). சம்பவத்தன்று இவர் அங்குள்ள வீர சக்தி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story