சூளகிரி அருகேமொபட் மீது பஸ் மோதி கட்டிட மேஸ்திரி சாவுஉறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு


சூளகிரி அருகேமொபட் மீது பஸ் மோதி கட்டிட மேஸ்திரி சாவுஉறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 April 2023 7:00 PM GMT (Updated: 27 April 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே நல்லகானகொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). கட்டிட மேஸ்திரி. இவருக்கு சந்திரா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை சீனிவாசன் தனது மொபட்டில் சப்படி நோக்கி சென்றார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சீனிவாசன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து அறிந்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story