ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x

ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

ஈரோட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோகமாக வரவேற்கிறார்கள். இதை பார்க்கும்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி. ஈரோடு மாவட்டத்தில் அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான். கடந்த 21 மாத ஆட்சியில் தி.மு.க. அரசு சொல்லக்கூடிய வகையில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

முதல்-மைச்சர் மு.க.ஸ்டாலின் பணத்தை மட்டும் நம்பி இந்த தேர்தலில் நிற்கிறார். பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். பெண்களுக்கு உரிமை தொகை இதுவரை தரவில்லை. இதேபோல் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சொத்து வரி, பால் விலை உயர்வு இதையெல்லாம் கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். விதிகளை மீறி தி.மு.க. செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுத்தால் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகுதி நீக்கம் செய்யப்படுவார். இந்த தேர்தல் வெற்றி என்பது வருகிற பாராளுமன்ற தேர்தல் மட்டுமன்றி அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

அடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார். அதற்கு இந்த இடைத்தேர்தல் மிக முக்கியத்துவம் பெற்ற அடித்தளமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story