துரோகிகளை தூள் தூளாக்குவோம்.- இ.பிஎஸ். ; ஒற்றுமை காப்போம். ஒருங்கிணைவோம்- ஓ.பி.எஸ் -ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதி மொழி


துரோகிகளை தூள் தூளாக்குவோம்.- இ.பிஎஸ். ; ஒற்றுமை காப்போம். ஒருங்கிணைவோம்- ஓ.பி.எஸ் -ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதி மொழி
x

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தங்களது ஆதரவாளர்களுடன் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

சென்னை

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான தொண்டர்கள் ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அ.தி.மு.க.வினர் 4 அணிகளாக தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

உறுதிமொழியை அவர் வாசிக்க தொண்டர்கள் திருப்பி சொன்னார்கள். அப்போது,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் உறுதி மொழி ஏற்றார்என்று உறுதிமொழி ஏற்றனர்.

எதிரிகள் ஒருபுறம், துரோகிகள் மறுபுறம் என்றிருக்கும் சூழல் பொய்வழக்குகளை முறித்து சதிவலைகளை அறுப்போம்.

குடும்ப ஆட்சியின் கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப சபதம் ஏற்போம். அதிமுக என்பது ஆயிரங்காலத்து பயிர். தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றி தழைத்து நிற்கும் ஆலமரம். இதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. அதிமுகவை கட்டிக்காப்போம்.

இந்திய அரசியல் சரித்திர வானில் நாடாளுமன்றத்தின் 3வது பெரிய கட்சியாக கழகத்தை மாற்றியவர் ஜெயலலிதா.நாடாளுமன்றத் தேர்தலுக்காக வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து வரலாற்று வெற்றிக்கு சூளுரைப்போம்.

நாற்பதும் நமதே நாளையும் நமதே என்று சபதம் ஏற்போம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று வெற்றி முழக்கமிட்டு திக்கெட்டும் வெற்றியை படைத்திடுவோம். அதற்காக அயராது உழைப்போம்.

கழகத்தின் வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம் என்று உறுதியேற்போம். தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம். புரட்சித் தலைவியின், புரட்சித் தலைவரின் பெரும்புகழையும் எந்நாளும் போற்றிடுவோம்.

களங்கள் அனைத்திலும் வென்றிடுவோம். கழகத்தை இமயமாய் உயர்த்திடுவோம் என்று உளமார உறுதியேற்போம். வாழ்க அண்ணா புகழ். வளர்க்க எம்ஜிஆரின் பெரும்புகழ். ஓங்குக அம்மாவின் நெடும்புகழ்.

வெல்க வெல்க வெல்கவே. அஇஅதிமுக என்றும் வெல்க வெல்க வெல்கவே" என்று கூற தொண்டர்கள் அதை அவரைப் பின் தொடர்ந்து முழங்கினர்.

தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் மேடையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது ஜெயலலிதாவை மீண்டும் பொதுச்செயலாளர் ஆக்குவோம் என்றும், ஒற்றுமை காப்போம். ஒருங்கிணைவோம். திமுகவின் மக்கள் விரோத செயலை மக்களிடம் சொல்வோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே களப்பணிகள் தொடங்குவோம். சர்வாதிகார போக்குக்கு முடிவு கட்டுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story