அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் வரும் 11ம் தேதி நடைபெறும்: ஓ.பி.எஸ். அறிவிப்பு


அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் வரும் 11ம் தேதி நடைபெறும்: ஓ.பி.எஸ். அறிவிப்பு
x

அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் வரும் 11ம் தேதி நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் சென்னை எக்மோர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில்11-10-2023 புதன் கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கழக ஒருங்கிணைப்பாளர், கழக பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story