இரவு 2 மணி வரை திரைப்படங்கள் திரையிட அனுமதிக்க வேண்டும் - முதல்-அமைச்சரிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை


இரவு 2 மணி வரை திரைப்படங்கள் திரையிட அனுமதிக்க வேண்டும் - முதல்-அமைச்சரிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை
x

திரையரங்குகளில் இரவு 2 மணி வரை திரைப்படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆகியோர் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர், திரையரங்குகளில் இரவு 2 மணி வரை திரைப்படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும், தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு மீண்டும் வரிச்சலுகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தனர்.



Next Story