தமிழக கர்நாடக எல்லையில் கரும்பு லாரியை வழி மறித்த யானை


தமிழக கர்நாடக எல்லையில் கரும்பு லாரியை வழி மறித்த யானை
x

ஆசனூர் அருகே கரும்பு லாரியை வழிமறைத்த யானை

தினத்தந்தி 29 Aug 2022 8:40 PM IST (Updated: 30 Aug 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் கரும்பு லாரியை யானை வழி மறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம்.

கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறைத்து, கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் இன்று மதியம் தமிழக கர்நாடக எல்லை காரப்பள்ளம் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையை குட்டியுன் யானை சாலை உலா வந்தது. அப்போது தாளவாடி இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை யானை வழி மறித்தது.

அச்சம் அடைந்த ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். பின்னர் லாரியில் இருந்த கரும்பை யானை துதிக்கையால் எடுத்து தின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் இரு புறமும் அணிவகுத்து நின்றன.

பின்னர் ஓட்டுநர் லாரியின் மீது ஏறி கரும்புகளை சாலை ஓரத்தில் தூக்கி எரிந்தார். யானை அந்த கரும்பை திங்க தொடங்கியதும், ஓட்டுநர் லாரியை எடுத்து சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story