திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி


திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
x

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

திருவள்ளூர்

வாலிபர் பிணம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த சிறுகுமி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக சிறுகுமி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நாகையம்மன் நகரை சேர்ந்த அன்பு என்பவரது மகன் குட்டி (வயது 22) என்பதும் இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது.

தந்தையுடன் தகராறு

போலீஸ் விசாரணையில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் குட்டி தனது தந்தை அன்புவிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டு பள்ளிப்பட்டில் உள்ள தனது பாட்டி வள்ளியம்மாவை பார்ப்பதற்கு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

மோட்டார் சைக்கிள் திருத்தணி அடுத்த சிறுகுமி அருகே செல்லும்போது சாலை வளைவில் எதிர்பாராத விதமாக ஓரத்தில் இருந்த கல் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குட்டி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story