விபத்தில் முதியவர் பலி


விபத்தில் முதியவர் பலி
x

மேலூர் அருகே நடந்த விபத்தில் முதியவர் பலியானார்

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் முகமது அப்துல்ரஹீம் என்ற பிரேம்ராஜா (வயது 66). இவரது மருமகள் தஸ்லிமா பானு (29). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அழகர்கோவில் ரோட்டில் வந்தனர். கிடாரிப்பட்டி அருகே வந்த போது அந்த வழியே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அப்துல்ரஹீம் என்ற பிரேம்ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். சிறிய காயங்களுடன் தஸ்லிமா பானு உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து மேலவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரணை நடத்தி வருகின்றார்.

1 More update

Related Tags :
Next Story