விபத்தில் முதியவர் பலி

மேலூர் அருகே நடந்த விபத்தில் முதியவர் பலியானார்
மேலூர்,
மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் முகமது அப்துல்ரஹீம் என்ற பிரேம்ராஜா (வயது 66). இவரது மருமகள் தஸ்லிமா பானு (29). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அழகர்கோவில் ரோட்டில் வந்தனர். கிடாரிப்பட்டி அருகே வந்த போது அந்த வழியே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அப்துல்ரஹீம் என்ற பிரேம்ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். சிறிய காயங்களுடன் தஸ்லிமா பானு உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து மேலவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரணை நடத்தி வருகின்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





