படப்பை அருகே மீன் பிடிக்க சென்ற முதியவர் ஏரியில் பிணமாக மிதந்தார்


படப்பை அருகே மீன் பிடிக்க சென்ற முதியவர் ஏரியில் பிணமாக மிதந்தார்
x

படப்பை அருகே மீன் பிடிக்க சென்ற முதியவர் ஏரியில் பிணமாக மிதந்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த காவனூர் ஊராட்சியில் உள்ள சாமிக்கண்ணு தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 68) இவர் அந்த பகுதியில் உள்ள ஏரியில் மீன்பிடித்து வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் ஏரியில் மீன் பிடிக்க சென்ற மோகன் ஏரியில் மிதந்து இறந்து கிடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோகனின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோகன் எப்போது வீட்டிலிருந்து சென்றார் மீன்பிடிக்கும்போது ஏரியில் மூழ்கி உயிரிழந்து உள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story