அறுந்து கிடந்த மின்வயரை மித்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி


அறுந்து கிடந்த மின்வயரை மித்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி
x

அறுந்து கிடந்த மின்வயரை மித்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலியானார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

அறுந்து கிடந்த மின்வயரை மித்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலியானார்.

காவேரிப்பாக்கம் அருகே வேடந்தாங்கல் பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் பெரியசாமி. விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 68) நேற்று மாலை விவசாய நிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு மின் ஒயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் அதனை மிதித்து விட்டார். இதனால் உடலில் மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதனிடையே வள்ளியம்ாள் இரவு முழுவதும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நிலத்திற்கு சென்றுபார்த்தபோது அவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார்.

இது குறித்து அவர்கள் பாணாவரம் ேபாலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று வள்ளியம்மாளின் உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story