பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்


பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்
x

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனிறி உயிரிழ்ந்தார். அவருக்கு வயது 99 ஆகும். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது,

பிரதமர் மோடியின் தாயார் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பிரதமர் மோடி வாழ்வில் அவரது தாயாரின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. பிரதமருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Next Story