அங்கன்வாடி பணியாளரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு


அங்கன்வாடி பணியாளரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
x

அங்கன்வாடி பணியாளரிடம் 7 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா(வயது 40). இவர் கிருஷ்ணாபுரம் அங்கன்வாடி மைய உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடிந்து தனது மொபட்டில் கிருஷ்ணாபுரத்தில் இருந்து வெங்கனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை அருகே ஹெல்மெட் அணிந்த கொள்ளையர்கள் 2 பேர் மஞ்சுளா ஓட்டி வந்த மொபட்டை வழிமறித்துள்ளனர். அப்போது திடீரென மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மஞ்சுளா அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண்ணை வழிமறித்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story