போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 28 Jun 2023 6:45 PM GMT (Updated: 29 Jun 2023 11:32 AM GMT)

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சிவகங்கை

இளையான்குடி,

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு கழகம், நாட்டு நல பணி திட்டம் மற்றும் இளையான்குடி சரக போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான், போலீஸ் அதிகாரிகள் சரவணக்குமார், முக்கண்ணன், மதுவிலக்கு பிரிவு போலீஸ் அதிகாரிகள் போஸ், அய்யனார் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த பேரணி இளையான்குடி கண்மாய் கரையில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி ெசன்றனர். மேலும் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்லூரி போதை பொருள் ஒழிப்பு கழக ஒருங்கிணைப்பாளர் அஸ்மத்து பாத்திமா, நாசர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமா கனி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Next Story