செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்பது கிராமப்புற வறுமையை போக்கவும் கிராமப்புற ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய திட்டமாகும். செங்கல்பட்டு மாவட்டம், மகளிர் திட்டம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் உள்ள (அச்சரப்பாக்கம் - 1, காட்டாங்கொளத்தூர்-1, மதுராந்தகம் -2, திருக்கழுக்குன்றம்-1) ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதியாக ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் 6 மாத காலம் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும். முன் அனுபவமாக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.

இருப்பிடம் சம்பந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும். விண்ணப்பம் பெற வேண்டிய முகவரி இணை இயக்குநர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், செங்கல்பட்டு மாவட்டம்.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 12-ந்தேதி ஆகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story