தொழிலில் கவனம் செலுத்தாததால் கணவருடன் தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலில் கவனம் செலுத்தாததால் கணவருடன் தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

தொழிலில் கவனம் செலுத்தாமல் கட்சி வேலைகளில் ஈடுபட்டதால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

திருவள்ளூர்

திருவொற்றியூர் சாத்துமா நகர் கிராம தெரு 3-வது தெருவில் வசித்து வருபவர் மாணிக்கம். கேட்டரிங் சர்வீஸ் தொழில் நடத்தி வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் 13-வது வார்டு வட்டச் செயலாளராகவும் வடசென்னை மாவட்ட கேட்டரிங் சர்வீஸ் மா வட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி சீதா (வயது 30). இந்த நிலையில், மாணிக்கம் தான் செய்து வந்த கேட்டரிங் தொழிலில் ஒழுங்காக ஈடுபாடு காட்டாமல் கட்சி வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தயாராக ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நேற்று மாலை கணவன் மாணிக்கம் மனைவி சீதாவுக்கிடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த மாணிக்கத்தின் மனைவி சீதா சமையல் அறைக்கு சென்று கதவை தாழ்ப்பாளிட்டு திடீரென தூக்குப்போட்டு கொண்டார். இதனைக்கண்டு பதறிப்போன மாணிக்கம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சமையலறையின் கதவை உடைத்து உள்ளே சென்று சீதாவை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் திருவொற்றியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது இர்பான் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story