லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரூர்:
அரூர் போலீசார் பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அரூர் பகுதியை சேர்ந்த ஆசிப் (வயது 49), பிரபாகரன் (30), அஸ்லாம் (25) என்பதும், லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு, செல்போன்கள் மற்றும் ரூ.9 ஆயிரத்து 730 பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





