மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 22 Sep 2023 7:00 PM GMT (Updated: 22 Sep 2023 7:00 PM GMT)
நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே மொளசி வெள்ளியம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக மொளசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வெள்ளியம்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே மது விற்ற அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி (வயது 50) என்பவைர போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 37 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story