மாடு திருடியவர் கைது


மாடு திருடியவர் கைது
x

சேலம் கொண்டலாம்பட்டி அருகே மாடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

கொண்டலாம்பட்டி

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் தனது வீட்டு முன்பு பசு மாடு ஒன்றை கட்டி வளர்த்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் ரமேஷ் தூங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் மாட்டை திருடி கொண்டு செல்ல முயன்றார். அப்போது மாட்டின் சத்தம் கேட்டு விழித்து கொண்ட ரமேஷ் ஓடிவந்து மாட்டுடன் கையும் களவுமாக பிடிபட்ட மர்ம நபரை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த கணேசன் (34) என்பது மாடு திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்

1 More update

Next Story