ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் ரெயில் நிலையம் அருகே கண்ணாடி மில் தெருவில் சரக்கு வாகனத்தில் ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் ஆத்தூரில் வாகன சோதனை நடத்தினர். அப்போது சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 2 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளி (வயது 27), ராஜா (41), கேசவன் (45), மணிகண்டன் (40) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சரக்கு வாகனம் மற்றும் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





