பள்ளிபாளையம் அருகே நிலப்பிரச்சினையில் விவசாயி உள்பட 2 பேர் மீது தாக்குதல் ஒருவர் கைது


பள்ளிபாளையம் அருகே  நிலப்பிரச்சினையில் விவசாயி உள்பட 2 பேர் மீது தாக்குதல்  ஒருவர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2022 6:45 PM GMT (Updated: 15 Dec 2022 6:46 PM GMT)
நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அடுத்த கீழ்புதூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன் (வயது 70). விவசாயி. இவருக்கும் பக்கத்து நிலத்தை சேர்ந்த மகுடேஸ்வரன் (38) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் அவர்களுக்கு இடைேய வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த மகுடேஸ்வரன், செங்கோடன், அவருடைய தம்பி பொன்னுசாமி ஆகியோரை தாக்கினார். இதில் காயம் அடைந்த செங்கோடன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும், பொன்னுசாமி பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து செங்கோடன் கொடுத்த புகாரின்பேரில் பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து மகுடேஸ்வரனை கைது செய்தார்.


Next Story