கண்ணாடி கடை உரிமையாளர் கைது


கண்ணாடி கடை உரிமையாளர் கைது
x

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கண்ணாடி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது39). இவர் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் நாமக்கல் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஸ்வநாதனை தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story