பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது

குருபரப்பள்ளி:
மகாராஜகடை அடுத்த கோதிகுட்லப்பள்ளியை சேர்ந்தவர் மேகலா (வயது 50). இவர் அதே பகுதியை சேர்ந்த விவசாயி மோகன் (53) என்பவரிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 72 சென்ட் நிலத்தை ரூ.9 லட்சத்துக்கு வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி மோகன் ஒரு வருடத்திற்கு முன் விற்ற நிலத்திற்கு மேலும் ரூ.50 ஆயிரம் வேண்டும் என கேட்டு தகராறு செய்தார். பணம் தர மறுத்த மேகலாவை உருட்டுகட்டையால் அடித்து தாக்கினாராம். இதில் காயமடைந்த மேகலா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்பேரில் மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





