கள் விற்ற 2 பேர் கைது

மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் கள் விற்பனை செய்வதாக பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்துவிற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் மாரண்டஅள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் பச்சையப்பன் ராஜேந்திரன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரண்டஅள்ளி ஈ.பி.காலனி பின்புறம் குமரவேல் (வயது40) என்பவரும், ஜீவா நகர் பகுதியில் நாகராஜ் (55) என்பவரும் கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 15 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். மேலும் அத்திமுட்லு பகுதியில் போலீசாரை கண்டதும் தப்பியோடிய சுந்தரம் என்பவரை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





