பொம்மிடி, பெரும்பாலை பகுதிகளில்பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது


பொம்மிடி, பெரும்பாலை பகுதிகளில்பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
x
தினத்தந்தி 28 May 2023 7:00 PM GMT (Updated: 28 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் உத்தரவின்பேரில் மாவட்ட முழுவதும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கதிரிபுரம் கிராமத்தில் மரத்தடியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வெங்கடேசன் (வயது 43), மற்றொரு வெங்கடேசன் (24), சென்னப்பன் (39) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பெரும்பாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் கே.புதூர் மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய சக்திவேல் (30), மதியழகன் (63), கோவிந்தசாமி (41), குமார் (37) ஆகிய 4 பேரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story