திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 60). இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு மர்ம நபர் இவரை தாக்கி கட்டி போட்டு விட்டு நகை, பணத்தை திருடி சென்றார். இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கல்லாவி அருகே உள்ள கருவானூரை சேர்ந்த சுரேஷ் (38) என்பவா் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர் தலைமறைவாகி விட்டதும் தெரிந்தது.. இந்த நிலையில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





