பிளஸ்-1 மாணவியை கடத்தியவர் போக்சோவில் கைது


பிளஸ்-1 மாணவியை கடத்தியவர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 12 Jun 2023 8:07 PM GMT (Updated: 13 Jun 2023 12:05 PM GMT)

தீவட்டிப்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தியவர் போக்சோவில் கைது

சேலம்

ஓமலூர்

ஓமலூரை அடுத்த வேப்பிலை ஊராட்சி செக்காரப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 மாணவி கடந்த 6-ந் தேதி திடீரென காணாமல் போனார். இது குறித்து அந்த மாணவியின் தாயார் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் விசாரணையில் பள்ளி மாணவியை கருமலைக்கூடல் கொம்புரான்காடு பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 35) கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி மாணவியை கடத்திச்சென்ற கோபால கிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ததுடன் மாணவியையும் மீட்டனர்.


Next Story