வீட்டில் மது பதுக்கியவர் கைது


வீட்டில் மது பதுக்கியவர் கைது
x
தினத்தந்தி 4 March 2023 7:30 PM GMT (Updated: 4 March 2023 7:30 PM GMT)
சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அடுத்த எம்.செட்டிப்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் மது பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஓமலூர் சப்-டிவிஷன் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது செட்டிப்பட்டியை சேர்ந்த மூர்த்தி (வயது 41) என்பவரது வீட்டில் 70 மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.


Related Tags :
Next Story