ஆத்தூர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்


தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 29 Sep 2023 5:15 AM GMT)

ஆத்தூர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி தினமான நேற்று காலையில் ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது, தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் ெசய்தனர்.


Next Story