சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனை

சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனையானது.
பெருந்துறை
பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் விர்ஜின் கலப்பின பசு மாடுகள் 120-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 130-ம், சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடுகள் 100-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 120-ம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
விர்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.53 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. சிந்து மற்றும் ஜெர்சி பசு மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது.
சீனாபுரம் கால்நடை சந்தையில் மாடுகள் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.






