இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி:தொழிலாளி கைது


இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி:தொழிலாளி கைது
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:47 PM GMT)

போடியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தேனி

போடி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆண்டிவேல் (வயது 40). கூலித்தொழிலாளி. நேற்று இவர், வீடு புகுந்து 24 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனல் அந்த பெண் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடினார். பின்னர் அவர் இதுகுறித்து போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஆண்டிவேலை கைது செய்தனர்.


Next Story