சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது
மதுராந்தகம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் தினந்தோறும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வது வழக்கம். ஜெமின் எண்டத்தூரை சேர்ந்த சந்துரு (வயது 24) ஆட்டோவில் அழைத்து செல்வார். இந்த நிலையில் அந்த சிறுமியின் தந்தை மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மங்கலபிரியாவிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தன்னுடைய மகளை ஆட்டோவில் சந்துரு கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். போலீசார் சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி அவரை செங்கப்பட்டு போக்சோ கோர்ட்டில் நீதிபதியின் முன் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story