கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை


கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
x

கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு

திருக்கழுக்குன்றம் தாலுகா வெங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுகன்ராஜ் (வயது 29). ஆட்டோ டிரைவர். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சுகன்ராஜுக்கும் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சுகந்தி கணவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுகன்ராஜ் கடந்த மாதம் 18-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பழைய சிவரம் பகுதிக்கு சென்று அங்கு பூச்சி மருந்தை குடித்துள்ளார். பின்னர் தன்னுடைய உறவினர்களுக்கு தான் பூச்சி மருந்து குடித்து விட்டதாக செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுகன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது நேற்று முன்தினம் குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

1 More update

Next Story