விபத்தில் ஆட்டோ டிரைவர் சாவு


விபத்தில்  ஆட்டோ டிரைவர் சாவு
x

விபத்தில் ஆட்டோ டிரைவர் சாவு

மதுரை

பேரையூர்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 34) இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இவர் ராஜபாளையம்-மதுரை சாலையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிரே வந்த வேன் ஒன்று ஆட்டோ மீது மோதியது.இதில் ஆட்டோ டிரைவர் அழகர்சாமி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில்பட்டியை சேர்ந்த தமிழ்மணி (41) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story