விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி


விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி
x
தினத்தந்தி 1 Oct 2023 7:00 PM GMT (Updated: 1 Oct 2023 7:01 PM GMT)

தூத்துக்குடி அருகே விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் குமாரசாமி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பொன்னையா (வயது 56). ஆட்டோ டிரைவரான இவர் ஸ்பிக்நகர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோவை நிறுத்திவிட்டு எதிரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு திரும்ப வந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், பொன்னையா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் பொன்னையா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story