பாமக நிர்வாகி கொலை - அன்புமணி நாளை போராட்டம்


பாமக நிர்வாகி கொலை - அன்புமணி நாளை போராட்டம்
x
தினத்தந்தி 10 July 2023 10:10 AM GMT (Updated: 10 July 2023 10:12 AM GMT)

செங்கல்பட்டில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ம.க. நகர செயலாளரான இவர் செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் வழக்கம் போல வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல முயன்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நாகராஜை சரமாரியாக வெட்டினர்.இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நாகராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர் அவரது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் செங்கல்பட்டில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நாகராஜ் கொலையை கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


Next Story