நெல்லையில் இன்று முதல் 2 நாட்கள் டிரோன் பறக்க தடை


நெல்லையில் இன்று முதல் 2 நாட்கள் டிரோன் பறக்க தடை
x

இன்று முதல் 2 நாட்கள் டிரோன் பறக்க தடை விதித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை,

இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) நெல்லை வருகிறார்.

இதற்காக நெல்லை- திருச்செந்தூா் சாலையில் உள்ள பெல் பள்ளி மைதானத்தில் விழா மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி., தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் உள்ளிட்ட தொகுதி வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களை ஆதரித்து ராகுல்காந்தி மக்களிடம் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் பாதுகாப்பு விதிமுறைகளை கருத்தில் கொண்டு இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 6 மணி வரை நெல்லையில் டிரோன்கள் பறக்க தடை விதித்து போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.


Next Story