கல்லூரி மாணவர் மீது சரமாரி தாக்குதல் மற்றொரு கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது


கல்லூரி மாணவர் மீது சரமாரி தாக்குதல் மற்றொரு கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
x

வடபழனி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த மாநில கல்லூரி மாணவர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய மற்றொரு கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

வடபழனி,

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 19), மாநில கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று காலை கல்லூரி செல்வதற்காக வடபழனி நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த நந்தனம் கலை கல்லூரி மாணவர்கள் சிலர் பிரேம்குமாரை மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் குழாயால் சரமாரியாக தாக்கினார்கள். பொதுமக்கள் முன்னிலையில் மாணவர் தாக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது தாக்குதலில் வலியால் பிரேம்குமார் துடித்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிரேம்குமாரை தாக்கிய கல்லூரி மாணவர்களை பிடிக்க முற்பட்ட போது அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து பிரேம்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தனம் கலை கல்லூரியை சேர்ந்த அபிஷேக் (19), அரசு (19), தமிழ்ச்செல்வன் (19), தீபகணேஷ் (19), உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, முன்விரோதம் காரணமாக பிரேம்குமாரை பஸ் நிலையத்தில் வைத்து தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்பு 7 மாணவர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story