கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது: வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்


கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது: வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 24 Jan 2024 9:12 AM GMT (Updated: 24 Jan 2024 10:24 AM GMT)

பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாக்கூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.

சென்னை,

பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாக்கூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இது குறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

'கர்பூரி தாக்கூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது: நாடு முழுவதும் சமூகநீதித் தென்றல் வீசட்டும்!

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், சோசலிசத் தலைவருமான கர்ப்பூரித் தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. கடும் எதிர்ப்பையும் மீறி பிகார் மாநிலத்தில் 26% இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு உள்ளிட்ட சமூகப் புரட்சிகளை செய்த தலைவரான கர்ப்பூரி தாக்கூருக்கு அவரது பிறந்தநாள் நூற்றாண்டில் பாரதரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானது. இது அந்த விருதுக்கு பெருமை சேர்க்கும்.

சமூகநீதியையும், மதுவிலக்கையும் சாதித்துக் காட்டிய கர்ப்பூரித் தாக்கூருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் நாடு முழுவதும் சமூகநீதித் தென்றல் வீசவும், மதுவிலக்கு மலரவும் வகை செய்யட்டும்!'

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story