சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை - பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்


சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை - பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்
x

சென்னை பூவிருந்தவல்லியில் பாஜக பிரமுகர் பிபிஜி சங்கர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

சென்னை,

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிபிஜி சங்கர். பிரபல ரவுடியான இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. வளர்பிறை ஊராட்சி மன்ற தலைவராகவும் பாஜகவில் எஸ் சி,எஸ் டி,மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில் காரில் சென்னையில் இருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த அவரை வழி மறித்த மர்ம கும்பல் காரின் மீது நாட்டு வெடி குண்டு வீசியுள்ளனர். இதில் நிலை குலைந்த கார் சிறிது தூரத்தில் நின்றது.

பின்னர் காரில் இருந்து வெளியேறிய பிபிஜி சங்கர் சாலையில் ஓடியுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் பிபிஜி சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேர பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மக்கள் அதிகம் கூடும் பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலையால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

மேலும் பாஜக பிரமுகர் பிபிஜி சங்கர் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 9 தனிப்படை அமைத்து கொலைக்கார கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்

"வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கர் அவர்கள், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது.

பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story