முட்புதரில் பிணமாக கிடந்த பொக்லைன் ஆபரேட்டர்


முட்புதரில் பிணமாக கிடந்த பொக்லைன் ஆபரேட்டர்
x

முட்புதரில் பிணமாக கிடந்த பொக்லைன் ஆபரேட்டர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

கீரனூர்-திருச்சி சாலையில் உள்ள வணிக வளாகத்தின் பின்புறம் உள்ள முட்புதரில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காட்டை சேர்ந்த பொக்லைன் எந்திர ஆபரேட்டர் நீலகண்டன் (வயது 49) என்பதும், இவர் அந்த வணிக வளாகத்தில் தங்கி பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மது போதையில் இருந்த நீலகண்டன் இயற்கை உபாதைக்காக சென்ற போது மயங்கி விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story