மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி
தியாகதுருகம்,
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் உதயமாம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அதே பகுதி்யை ேசர்ந்த ஆசிர்வாதம் (வயது 44) என்பவர் வீட்டின் பின்புறம் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பெரியமாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே மதுபாட்டில் விற்பனை செய்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டார். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த இளையபெருமாள் மகன் விஜயகுமார் (35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






