வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
x

வீட்டின் பூட்டை உடைத்து நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). உடல்நிலைப்பாதிக்கப்பட்ட இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு சென்றார். இதை நோட்ட மிட்ட மர்மநபர்கள், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 3½ பவுன் நகையை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story