வீடுபுகுந்து 7 பவுன் நகை திருட்டு


வீடுபுகுந்து 7 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 19 Oct 2023 7:30 PM GMT (Updated: 19 Oct 2023 7:31 PM GMT)

வீடுபுகுந்து 7 பவுன் நகை திருடப்பட்டது.

சிவகங்கை

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா. விவசாயி. இவர் சம்பவத்தன்று மதியம் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர் வீட்டின் கதவு அருகே வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தார். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்தை திருடி சென்றார். இதுகுறித்து சின்னையா உலகம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story